கட்டுநாயக்க அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டவர் பலி .

கட்டுநாயக்க அதிவேக வீதியின் கடவத்த மற்றும் கெரவலப்பிட்டிய பகுதிகளுக்கு இடையே இன்றும்  வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வௌிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் லொறியொன்றின் பின்புறத்தில் வேனொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வேனில் பயணித்த ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.