இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானார்!

இளையராஜாவின் மகள் பவதாரிணி  காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்தார்.

அவர் இலங்கையில் காலமானதாக செய்திகள் வந்துள்ளன. 47 வயதேயான அவர் 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5:20 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படவிருக்கின்றது. கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். பவதாரணியின் மறைவிற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபல்யங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.