மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.

கொழும்பு மட்டக்குளியிலுள்ள “ரண்திய உயன” வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் இன்று (15) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 8.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.