ஐ.எம்.எப். பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை,

சர்வதேச நாணய நிதியத்தின் (‍IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இரவு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் குறித்த குழுவினர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதியமைச்சு கூறியுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தின் அண்மைக்கால நிலைமைகளை அவதானிப்பதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த விஜயத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.