நடிகை கெளதமி கொடுத்த புகாரில் சிக்கிய நபர்.

நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கடந்த மாதம் அளித்தார்.

அதில் அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்து உள்ளனர். எனவே தனது அசையா சொத்துக்களை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார் உட்பட 6 பேரை கேரளாவின் திருச்சூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் மிக அண்மையில் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பனிடம் விசாரிக்க 3 நாட்கள் பொலிஸ் காவல் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பொலிஸ் காவலுக்கு அனுமதியளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.