14 வயது சிறுமியை விகாரையில் அடைத்து வைத்த பிக்கு கைது.

14 வயது சிறுமியுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து, அவரை விகாரையில் நான்கு நாட்கள் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் 16 வயதான பிக்குவுக்கும் 14வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில்,சிறுமியை விகாரைக்கு அழைத்து சென்ற பிக்கு அங்கு அவரை 4 நாட்கள் தடுத்து வைத்துள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிக்குவை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிக்கு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட  நிலையில் அவரை, ஜனவரி 4ஆம்திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல நீதிவான் உத்தரவிட்டார்.