யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படும்.

‘யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கை எதிர்வரும் சில தினங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவத்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ‘யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நிறுத்தப்படவில்லை எனவும், பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சிலர் தமது தங்குமிடங்களை மாற்றி வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் தகவல் வழங்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வலியுறுத்தியுள்ளார்.