மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட்.

தனது 15 வயதான மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்டை நாரம்மல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் களப்படை தலைமையகத்தில் சேவையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்டே இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாராம்மல தெமடகஹாவெல பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அண்மையில் மருத்துவர் ஒருவரிடம் சம்பவம் பற்றி கூறிய பின்னரே பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.