அமெரிக்காவில் 10 வயது மகனை பட்டினி போட்டு கொன்ற இந்திய பெண்.

அமெரிக்காவில் 10 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்த இந்திய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கரோலினாவின் மோரிஸ்வில்லேவை சேர்ந்தவர் 33 வயதான பிரியங்கா திவாரி.

இவர் சில தினங்களுக்கு முன்னர் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து தனது 10 வயது மகன் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக கூறினார்.

இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்த போது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

அதாவது அவன் உயிரிழந்து நாள் கணக்கு ஆகியதும், சிறுவனின் உடல் எடை மிகவும் குறைந்திருந்ததும் தெரியவந்தது.

உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதும், துன்புறுத்தப்பட்டதுமே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்த காவல்துறை இது தொடர்பான முழு தகவலை கூறவில்லை.

இதையடுத்து பிரியங்காவை கொலை வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

பிணை கிடைக்காத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரியங்காவின் வழக்கு மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் திகதி நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.