மன்னாரில் மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க அஞ்சலி

தாயகம் கோரிய உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அந்த வகையில் மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது மாவீரர்களின் உறவினர்கள் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதி ஷநிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு ஷகண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.