சிறுவர் இல்லமொன்றின் காவலாளியின் கணவனால் 20 சிறுமிகள் பாலியல் துஷ்பிர​யோகம்.

சிறுவர் இல்லமொன்றின் காவலாளியின் கணவனால், அந்த இல்லத்தில் இருக்கும் 20 சிறிய பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார்.

 குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அந்த காப்பகத்தில், கடந்த சில நாட்களுக்குள்  மேலும் நான்கு சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்றும் தகவல் பதிவாகியுள்ளது, கடந்த மாதத்தில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளின்  மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என்றார்.