இலங்கையில் நடக்கவிருந்த உலக கிண்ண போட்டி இரத்து-சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிரடி.

2024  ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளைஞர் உலகக் கிண்ண போட்டியை இலங்கையில் இருந்து நீக்கி தென்னாபிரிக்காவிற்கு வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று தீர்மானித்துள்ளது. அஹமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசேட மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன்,

இலங்கை அணியை பங்குபற்றுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகத்தில் அரசியல் செல்வாக்கு செலுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் சங்கத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்த தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.