கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமானை நீக்கி நசீர் அஹமட்டுக்கு பதவி வழங்க திட்டம்


கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானை நீக்கி அண்மையில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு அப்பதவியை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று சிங்கள வார இதழ் ஒன்று  தகவலை வெளியிட்டுள்ளது.

மாகாண ஆளுநர்கள் பலரை இடமாற்றம் செய்ய ரணில் அரசு திட்டமிட்டுள்ளது என செய்தி கிடைத்துள்ளதாகவும் அதற்கமைய அண்மையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.