யுனெஸ்கோ நிர்வாக சபைக்கு இலங்கை தெரிவு.

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பு யுனெஸ்கோ நிர்வாக சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2023-2027 காலகட்டத்திற்கான 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புக்கான தேர்தல் நேற்று 15 பரிஸில் நடந்த 42 வது யுனெஸ்கோ பொது மாநாட்டில் நடைபெற்றது. வாக்களிப்புச் செயற்பாட்டில் பங்குபற்றிய 188 உறுப்பு நாடுகளில் 144 வாக்குகளைப் பெற்று இலங்கை நிறைவேற்று சபையில் தனது இடத்தைப் பெற்றுக்கொண்டது. யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இருந்து 76 சதவீத வாக்குகளைப் பெற்று யுனெஸ்கோ பணிப்பாளர் சபைக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவாகியுள்ளார். அவர் அடுத்த வருடம் முதல் 2027ஆம் ஆண்டு வரை பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ஒன்பது வேட்பாளர்களில் ஆறு பேர் யுனெஸ்கோ உறுப்பு நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இலங்கையுடன், பாகிஸ்தான், இந்தோனேஷியா, பங்களாதேஷ், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளாகும்.