பாரதிய ஜனதா கட்சி ஒதுக்கிய தாமரைச் சின்னம்- சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை .


தேசிய மலரான தாமரையை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கியதில் விதிமீறல் இருக்கிறதா என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்,  விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்திருக்கிறது.

ஹதேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி’ எனவும், ஹநாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது’ எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிசக் கட்சியின் நிறுவனத் தலைவருமான வு.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில்,பாஜக-வுக்கு தாமரைச் சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்துசெய்யக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

தனது மனுவைப் பரிசீலித்து, பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரைச் சின்னத்தை ரத்துசெய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி  பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமரைச் சின்னத்தை பா.ஜ.வு-க்கு ஒதுக்க எந்தச் சட்டப்பிரிவு தடை செய்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்