மின் கட்டணம் செலுத்தாததால் 7 இலட்சதுக்கு மேலான நுகர்வோரின் மின் விநியோகம் துண்டிப்பு.

கடந்த 10 மாதங்களில் மின் கட்டணம் செலுத்தாததால் 7 இலட்சத்து 88 ஆயிரத்து 235 நுகர்வோரின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் மின்கட்டண அதிகரிப்பு – வரி அதிகரிப்பு, ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால், மின்கட்டணம் செலுத்துவது தற்போது சவாலாக உள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த ஆண்டு அரசாங்கம் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.