அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இன்று பணிப்புறக்கணிப்பு!

சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி 17 பல்கலைக்கழகங்களும் இன்று (02) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியமும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து  நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.