வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் திட்டம்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுள்ளதாகவும் குறித்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மோசடிகள் இடம்பெற்றிருந்தால் விசாரணை நடத்துவதற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் எனவும் குறுகிய அரசியல் நோக்கங்களினால் இந்த நடவடிக்கையை மீளப்பெற முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டணச் சலுகையுடன் வழங்கப்பட்ட 119 உரிமங்களை முறைகேடாகப் பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த வாகனங்களில் 75வீதம்  ஒரு நிறுவனத்தினால் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்