பெண் குழந்தை பிறந்தால் 1 இலட்சம் ரூபா நிதியுதவி.

குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என மாநில அரசு  அறிவித்துள்ளது.

பெண் குழந்தைகளின் நலனுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, மாநிலத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் அட்டைகளை வைத்துள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறந்தால் முதலில் ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். அதன் செல்லும்போது 7000 ரூபாய், ஒன்பதாம் வகுப்பில் எட்டாயிரம் ரூபாய், இறுதியாகக் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு ஒன்றாம் வகுப்பில் சேரும்போது 6 ஆயிரம் ரூபாய், ஆறாம் வகுப்புக்கு பிறகு 73 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் இதனைப் பெண் குழந்தையின் எதிர்கால கல்வி மற்றும் திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என மாநில அரசு அறிவித்துள்ளது.