பிரித்தானியாவில் புகைத்தல் தொடர்பாக பிரதமர் ரிசி சுனக்கின் திட்டம்.

பிரதம மந்திரி ரிஷி சுனக், கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டை முடித்து, அடுத்த தேர்தலுக்கான தனது தேர்தல் உரையில் சுகாதார சேவையை ஆதரிப்பதாகவும், புகைபிடிப்பதைத் தடுப்பதாகவும் உறுதியளித்தார்.  சிகரெட் பிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார். சிகரெட் பிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

மான்செஸ்டர் நகரத்தில் நேற்று நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் பேசிய அவர், ‘சிகரெட் பிடிப்பதற்கான வயது ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படும். இதனால், 14 வயது சிறுவனுக்கு சிகரெட் சட்டப்பூர்வமாக விற்கப்படமாட்டாது. சுதந்திரமான வாக்களிப்பு முறை கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். எனவே, அரசியல்வாதிகள் தங்கள் முடிவை மனசாட்சியின்படி எடுக்க வேண்டும்.பிரிட்டன் தேசிய சுகாதார அமைப்பின் மீது புகைப்பழக்கம் கடும் அழுத்தத்தை விளைவிக்கிறது.

இதற்காக, ஆண்டுக்கு 17 பில்லியன் யூரோக்கள் செலவிடப்படுகிறது. சட்டப்பூர்வ வயதை உயர்த்துவது, 2030ஆம் ஆண்டுக்குள் புகைப்பழக்கம் இல்லாத சமூகம் என்ற இலக்கை அடைய உதவும்’ என்றார்.பிரிட்டனில் அதிகப்படியான சிகரெட்டுகளை விற்கும் இம்பீரியல் பிராண்டு நிறுவனத்தின் பங்குகள் 4.3 சதவிகிதம் குறைந்துள்ளது. பிரிட்டனுக்கு வெளியே அதிகப்படியான சிகரெட்டுகளை விற்கும் பிரிட்டிஷ் அமெரிக்கன் டோபாக்கோ நிறுவனத்தின் பங்குகள் 1.9 சதவிகிதம் குறைந்துள்ளது.

பிரிட்டனில் புகைப்பிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது தற்போது 18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் அரசு எடுத்துள்ள அதிரடி முடிவால் புகைப்பழக்கத்திற்கு மாற்றாக நிகோடின் உள்ளிட்டவற்றை கொண்டு வர புகையிலை நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.