கொழும்பு -கொள்ளுப்பிட்டி பயணிகள் பேருந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம். .

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 17 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்வமானது இன்று காலை இடம்பெற்றுள்ளதோடு 2 பயணிகள் பேரூந்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இதேவேளை டூப்ளிகேஷன் வீதி மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.