தேர்தலில் வெற்றி பெற்றால், தெரசா மேயின் பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வதாக தொழிலாளளர் கட்சி அறிவிப்பு.

ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதம மந்திரி தெரசா மேயின் பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வதாக பிரிட்டனின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. உறுதியளித்துள்ளது. தொழிற்கட்சியின் பிரெக்சிட் செய்தித் தொடர்பாளர் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் பிரிந்த பின்னரும் இங்கிலாந்தில் தங்குவதற்கான உரிமையை அவரது கட்சி உத்தரவாதம் செய்யும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தின் பலன்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.

செவ்வாயன்று லண்டனில் பிரெக்சிட்டிற்கான தனது கட்சியின் பார்வையை முன்வைத்து, ஸ்டார்மர் பிரிட்டிஷ் வாக்காளர்களுக்கு மேயின் ‘கடினமான பெக்ஸிட்’ திட்டங்களுக்கு ஒரு தெளிவான மாற்றீட்டை வழங்க முயல்வதாக தெரிவித்தார். ஒற்றைச் சந்தையை விட்டு வெளியேறி, ‘ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரம்பற்ற நகர்வுகளை அனுமதிக்கும் கடப்பாட்டிலிருந்து இங்கிலாந்தை நீக்கி – ஒரு சுத்தமான இடைவெளியை விரும்புவதாக மே  தெரிவித்திருந்தார்.

ஆனால்,  மேயின் பிரெக்சிட் பார்வை ‘பொறுப்பற்றது’ என்றும் ஜூன் 8 தேர்தல் அடிப்படையில் பிரிட்டிஷ் மக்கள் எந்த வகையான பிரெக்சிட்டை விரும்புகிறார்கள் என்பதற்கான வாக்கெடுப்பு என்றும் ஸ்டார்மர் கூறினார். ஒரு தொழிற்கட்சி அரசாங்கம் மேயின் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை மூலோபாயத்தை மீண்டும் ஏற்படுத்தும்  என்றும், அதற்குப் பதிலாக ஒற்றைச் சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தின் பல நன்மைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கவனம் செலுத்தும் என்றும் ஸ்டார்மர் கூறினார்.