அடுத்த மாதம் இலங்கைக்கு வரவிருக்கும் சீன ஆய்வுக் கப்பல் தொடர்பில் அமெரிக்கா கவலை.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிச் செயலாளர் திருமதி விக்டோரியா நுலாண்ட் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அடுத்த மாதம் இலங்கைக்கு  சீன ஆய்வுக் கப்பல் வரவிருப்பதான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாரா நிறுவனம் சீன ஆராய்ச்சியை இலங்கைக்கு கொண்டு வருகிறது. இந்தக் கப்பலின் இலங்கைப் பயணம் குறித்து இந்தியாவும் கவலை கொண்டுள்ளது.இந்த கப்பல் அடுத்த மாதம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடைய உள்ளது. இதேவேளை, சீன ஆய்வுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கைக்கு வர அனுமதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.