தகராறு செய்த கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி நுவரெலியாவில் சம்பவம்.

 

டி.சந்ரு செ.திவாகரன்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28பி விஜிதபுர பகுதியில் சனிக்கிழமை இரவு கத்திக்குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது விஜித்தபுர மார்காஸ்தோட்ட பிரதேசத்தில் தனது வீட்டில் வைத்து கணவன் மனைவிக்கிடையே சனிக்கிழமை இரவு வழக்கம்போல் 11 மணி அளவில் வாக்குவாதம் எழுந்துள்ளது தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரம் அடைந்த மனைவினால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இலக்கம் 28பி விஜிதபுர பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பஹிதரன் சந்திரசேகரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் பொலிஸ் பாதுகாப்பில் அதே இடத்தில் வைக்கப்பட்டு நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளதுடன் , நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகள் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மனைவி பாத்திமா ரிஸ்வானாவை கைதுசெய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.