விச ஜந்து தாக்கி ஊடகவியலாளர் மரணம் .

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத்  தொகுப்பாளர்  ஜெகநாதன் டிரோன் தனது 27 ஆவது வயதில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) இரவு மடுவில் காலமானார்.

கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில் நேற்று இரவு திடீர் என ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலலேயே அவர் உயிரிழந்துள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரது உடலில் விச ஜந்து ஒன்று தாக்கியமையே அவரது மரணத்துக்கான காரணம் என மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.