நீர் வழங்கல் சபை விடுத்துள்ள விசேட முக்கிய அறிவிப்பு.

மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதால், அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளுக்கு மாத்திரமே தண்ணீரை பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரியுள்ளது

நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.

வரட்சியான காலநிலையினால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு வருந்துவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளதுடன், இந்நேரத்தில் நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அந்தச் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, வாகனங்களை கழுவுதல் போன்ற அத்தியாவசிய தேவையற்ற நடவடிக்கைகளுக்கு நீர் பாவனையை குறைத்து, அன்றாட நடவடிக்கைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறும் சபை கோரிக்கை விடுத்துள்ளது.