அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எதிர்ப்புப் போராட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம்.

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் மற்றும் மற்றொரு மாணவர் ஒருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒரே நேரத்தில் இரு நீர்த்தாரை வாகனங்கள் மூலம் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமான பொலிஸார், கலகத் தடுப்புப் பிரிவினர் லிப்டன் சுற்றுவட்டத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.