கிழக்கு மாகாண ஆளுநருடன் கைக்கோர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம்!

Keshihan Ilamuruganathan-திருகோணமலை

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளன தலைவர் Dr. தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் Dr. ஹரித்த அலுத்கேக்குமிடையிலான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் முன்னெடுக்கப்படும் சேவைகளுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் (GMOA) ஒத்துழைப்பு வழங்குவதாகவும், ஆளுநரால் சுகாதார துறைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் தங்களுடைய சேவைக்காக தங்களை முழுமையாக அற்பணிபதற்காக ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்ததோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.