பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து – 10 பேர் படுகாயம்

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துள்ளானது.

இதில் இதுவரையில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் மீட்பு பணிகள் துரதமாக இடம்பெறுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்த  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.