இராணுவத்தினரின் பங்களிப்புடன் குருந்தூர் மலையில் விகாரை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் இதேவேளை இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே குறித்த விகாரை பணி இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக அமைக்கப்பட்ட கல்வெட்டுமூலம் உத்தியோகபூர்வமாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த குருந்தூர் மலை பிரதேசத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு இங்கு வருகைதருபவர்களை வாகனங்களை பதிவு செய்துவருகின்றனர்இதன் மூலம் மீண்டும்  குருந்தூர் மலையில்  திட்டமிட்டு மேற்கெள்ளப்பட்ட பௌத்தமயமாக்கல் முயற்சி அம்பலமாகியுள்ளது குறிப்பாக 79 ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களம் எடுத்து அங்கு நீதிமன்ற கட்டளைகளை மீறி இராணுவத்தை கொண்டு விகாரை அமைத்துள்ளதோடு மேலும் மக்களின் 279 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க  தொல்பொருள் திணைக்களம் முயற்ச்சித்து  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.