வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன: வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவிப்பு.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறினார்.மேலும், வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகளை மூடியுள்ளதாகவும், பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

இதற்கு என்ன காரணமென ஆராய்ந்த போது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகரபுறங்களை நோக்கி செல்கின்றார்கள் எனத் தெரிவித்தார் இரண்டாவது காரணம் பிறப்பு விகிதம் குறைவு? இதே விடயம் மட்டக்களப்பில் அரசாங்க அதிபராக ஏழு வருடங்கள் இருந்தபோது கிராமபுறங்களிலே பாடசாலைகளை மூடியதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்’ எனத் தெரிவித்துள்ளார்.