வெம்பிளி பகுதியில் இந்திய மாணவி ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளரர்.


மேற்படிப்புக்காக லண்டன் வந்த இந்திய மாணவியை லண்டன் வெம்பிலியில் உடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டவர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஐதராபாத் பகுதியை சேர்ந்த 27 வயது கொந்தம் தேஜஸ்வினி என்பவரே லண்டன் வெம்பிலியில் செவ்வாய்க்கிழமை கத்திக்குத்துக்கு இலக்கானவர்.தேஜஸ்வினி சம்பவயிடத்திலேயே பலியானதாக லண்டன் பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.மேலும், தாக்குதலுக்கு இலக்கான இன்னொரு 28 வயது பெண் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

தேஜஸ்வினியின் உறவினர் விஜய் என்பவர் தெரிவிக்கையில், தேஜஸ்வினி மற்றும் நண்பர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் அந்த பிரேசில் நபர் சில நாட்களுக்கு முன்னர் தான் குடியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் தேஜஸ்வினி முதுகலைப் பட்டம் பெற லண்டன் சென்றதாக கூறப்படுகிறது.தற்போது இந்த விவகாரம் தொடர்பில் 24 வயது நபர் மற்றும் 23 வயது பெண் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர்.இவர்களுடன் இன்னொரு 23 வயது நபரும் கைதாகியுள்ளார். இதனிடையே, பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே பிரேசில் நாட்டவர் கைதானதாக கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில் ஒத்துழைத்த பொதுமக்களுக்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.