சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் குறித்து எச்சரிக்கை.

இணையங்களில் பரவலாக விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் நூற்றுக்கணக்கான பல்வேறு இணையதளங்களில் கிடைக்கின்றன,

இவற்றை பயன்படுத்திய பிறகு ஒரே இரவில் தங்கள் சருமம் அழகாக மாறும் என்று மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

இந்தநிலையில் அவ்வாறான பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா போன்ற விடயங்களை ஆராயுமாறு மருத்துவர் கஹவிட்ட வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் தோல் மருத்துவர் என்ற ரீதியில் ஒரே இரவில் சருமத்தை அழகாக மாற்றும் எந்தவொரு பொருளையும் தாம் பரிந்துரைக்கவில்லை என்றார்.

எனினும் எவராவது, தனது தோலில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அது படிப்படியாகவும் முறையாகவும் செய்யப்பட வேண்டும் என்றும் தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட குறிப்பிட்டுள்ளார்.