இமானுவேல் ஆனோல்ட் கைது.

கடந்த 13ம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் இரண்டு நபர்களிடையே  இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரால் வைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோதல் சம்பவம் தொடர்பில்  இன்று வாக்குமூலம் பெற யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.