நேற்று காணாமல் போன இருவரும் சடலமாக மீட்பு.

காணாமல் போன இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாரியபொல பிரதேசத்தில் வயல் ஒன்றுக்கு அருகில் உள்ள குழியில் குறித்த இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிந்தவர்கள் 35 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.