டெக்சாஸ் மாலில் பயங்கர துப்பாக்கி சூடு.! குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வணிக வளாகத்தில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏழு பேர் காயமடைந்தனர் என்றும் அவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவரை காவல்துறை சுட்டுக்கொன்ற நிலையில், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டு சத்தத்தை கேட்டு அருகில் இருந்த மக்கள் ஒட்டம் பிடித்துள்ளனர்.