இந்திய ரூபாவினை இலங்கையில் பயன்படுத்த அனுமதி.

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாவினை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் விளக்கமளித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், தகவல் தொழில்நுட்பம், மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இங்கு தலைமை உரையை ஆற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்,

இந்திய ரூபாவை இலங்கை மத்திய வங்கியால் நியமிக்கப்பட்ட நாணயமாக மாற்றுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மட்டுமன்றி இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளும் அதனை இலங்கையில் பயன்படுத்தலாம் என்றார்.