ரூ.3.75 லட்சம் வீட்டு வாடகை! அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் – கேஎஸ் அழகிரி

என் வீட்டு வாடகை ரூ.16,000, எனக்கு 1 வருட வீட்டு வாடகை பாக்கி இருக்கு என நொந்து கொள்ளும் கேஎஸ் அழகிரி.

இதுதொடர்பான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி ட்விட்டர் பதிவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் மாதம் ஒன்றுக்கு ரூ.3.75 லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது என்றும் ரூ.3 லட்சம் கைக்கடிகாரம் எப்படி அணிய முடிகிறது எனவும் எழுப்பியுள்ளார்.

50 ஆண்டு பொது வாழ்க்கையில் 2 முறை எம்எல்ஏ, 1 முறை எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன். 1 வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன் என கேஎஸ் அழகிரி நொந்து கொள்ளும் அளவில் கூறியுள்ளார்.

4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? 3 லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.