அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் ஒன் லைனில் கசிந்தது எப்படி?

Kumarathasan Karthigesu

இளம் படைவீரர் கைது

சமூக வலைத்தளங்களால் ஆளப்படும் உலகில் ஒன் லைனில் ரகசியங்களைக்காப்பது எளிதல்ல. அமெரிக்காவும் அதில் மண்கவ்வி இருக்கிறது. வீடியோ கேம் குழுக்களுக்குப் பெயர் பெற்ற “டிஸ்கோட்” (Discord) என்ற சமூக வலைத் தளத்தில் இயங்கிய மூடிய அரட்டைக் குழு (closed online group) ஒன்றின் ஊடாக நாட்டின் உயர் பாதுகாப்பு ரகசியங்கள் வெளி உலகிற்குக் கசிந்துள்ளன.

“வீக்கிலீக்ஸ்”(WikiLeaks) ரகசிய ஆவணக் கசிவுக்குப் பின்னர் அதை ஒத்த ஒரு பெரும் உளவுத் தகவல் கசிவு எனச் சொல்லப்படுகின்ற இந்தச் சம்பவம் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனை உலுப்பியிருக்கிறது.

உக்ரைனின் வெற்றி வாய்ப்பு , அமெரிக்காவின் நேச நாடுகளுடனான உறவு, அதிபர் புடினின் உடல் நிலை, ஐ.நா. செயலர் மீதான வேவு, உக்ரைன் களத்தில் நேட்டோ படைகள் போன்றன சம்பந்தப்பட்ட பல ரகசியமான உளவுத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட – நூற்றுக்கணக்கான – உளவுத்துறை ஆவணங்கள் இணையத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பாக

மாசாசூசெட் மாநிலத்தின் தேசிய வான் காப்புக் காவலர் படையைச் சேர்ந்த (Massachusetts Air National Guard) 21 வயதான இளம் வீரர் ஒருவரை எப்பிஐ (FBI) கைதுசெய்திருக்கிறது. அவர் அந்தப் படைப் பிரிவின் உளவுப் பகுதியில் ஐரி நிபுணராகப்(IT specialist) பணியாற்றிவந்தவர். ஆவணங்கள் முதலில் வெளியாகிய அந்த அரட்டைக் குழுவின் (chat group) தலைவராகவும் இருந்துள்ளார்.

படம் :கைது செய்யப்பட்டுள்ள இளம் சைபர் துறை நிபுணர் ஜாக் ரெக்சேய்ரா (Jack Teixeira)

வீடியோ விளையாட்டுகள், அரட்டை என்று பொழுதைப் போக்குகின்ற அந்த மூடிய ஒன் லைன் குழுவில் (closed online group) அவரை விடவும் வயதில் குறைந்த சுமார் முப்பது பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தேசிய உளவுத் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் அந்தக் குழுவிலேயே முதலில் கசிந்து பின்னரே வெளியே சமூகவலைத் தளங்கள் சிலவற்றில் பரவியுள்ளது என்பதை அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வு விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டின் தேசிய பாதுகாப்பில் காணப்படுகின்ற பரதூரமான பலவீனத்தைக் காட்டுகின்றது என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பாதுகாப்புக் கட்டமைப்புகளில் வயது மூப்பும் அனுபவத் திறமையும் வாய்ந்த பலர் இடம்பெற்றிருந்தாலும் நவீன கால சைபர் துறைப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பப் போர் முறைமைகளில்-அவை சார்ந்த புலனாய்வு வேலைகளில் – அதிகம் இள வயதினரே கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.கைது செய்யப்பட்ட விமானப்படையின் இளம் வீரரும் அத்தகையோரில் ஒருவரே ஆவார். அவர் வான்படைக் காவல் புலனாய்வுப் பிரிவில் சைபர் கட்டமைப்புத் துறைசார் நிபுணராகப் (cyber transport systems specialist) பணியாற்றியிருக்கிறார்.

ஜாக் ரெக்சேய்ரா (Jack Teixeira) என அறியப்படும் அந்த இளம் வீரர் அவரது நிபுணத்துவத் திறமைசார் பொறுப்பின் கீழ் இராணுவத் தொடர்பு வலைப் பின்னல்களையும் கேபிளிங் மையங்களையும் (military communications networks, including their cabling and hubs) அணுகக் கூடிய அதிகாரத்தைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் ரகசிய ஆவணங்கள் பகிரப்பட்டதன் பின்னணியில் உண்மையில் யார் உள்ளனர் என்பது தெளிவாகவில்லை.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">