யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் ஹெரோய்ன் ஏற்றி 15வயது மாணவன் உயிரிழப்பு
![](https://meiveli.com/wp-content/uploads/2022/11/22-632f1513e7a59-600x375-1.jpg)
யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் ஹெரோய்ன் போதைப்பொருள் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ர்துள்ளார்.மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் 15 வயது மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்தவாரம் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.மாணவனின் சடலத்தை நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். ஹெரோய்னை ஊசிமூலம் இந்த மாணவன் பயன்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, குறித்த மாணவருடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் ஹெரோய்ன் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.