அதிகாரப்பகிர்வு தொடர்பான விசேட சந்திப்புக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் இரா.சம்பந்தன்.

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அழைத்துள்ளார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பான பொதுவான கருத்தை எட்டுவது பற்றி விவாதிக்கும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தை இன்று மதியம்  இரா.சம்பந்தனின் உறவினர் வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதில் பங்கேற்குமாறு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.