• Tuesday, March 21, 2023

Meiveli Meiveli - News

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

பலாலி பகுதயில் இராணுவத்தினர் வசமுள்ள 13 ஏக்கர் அரச காணியை விடுவிக்யாழ். கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை

By Editor On Oct 19, 2022
94
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

யாழ்.பலாலி அன்ரனிபுரத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 13 ஏக்கர் அரச காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால், யாழ். கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பாதுகாப்புத் தரப்பினரும் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் மேலதிக செயலராக இணைக்கப்பட்ட இளங்கோவனின் பங்கேற்புடன் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த வாரம் கூட்டமொன்று நடைபெற்றது.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போதும் முகாம்களில் வசிக்கும் மக்களை நிரந்தரமாக குடியமர்த்தும் முயற்சிகள் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் ஒரு கட்டமாக பருத்தித்துறைப் பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கும் பலாலி அன்ரனிபுரத்தில் உள்ள அரச காணியைப் பெற்றுக் கொடுத்து அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலாலி அன்ரனிபுரத்திலுள்ள 13 ஏக்கர் அரச காணி பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளது. அதனை விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதற்கு பாதுகாப்புத் தரப்பினரும் இணங்கியுள்ளதுடன், இறுதி முடிவு தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலே எடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில் பல கட்டங்களாக 20 ஆயிரத்து 872 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது எனவும், இன்னமும் 3 ஆயிரத்து 27 ஏக்கர் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் யாழ். மாவட்டச் செயலர் க.மகேசன் நேற்று ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

விடுவிக்கப்படாமலுள்ள 3 ஆயிரத்து 27 ஏக்கரில், ஆயிரத்து 617 ஏக்கர் காணியைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு சுவீகரிப்பதற்கு காணி அமைச்சு ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Prev Post

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு: எடுக்கபடும் நடவடிக்கை

Next Post

தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு அதிமுக முழு மனதாக ஆதரவு.

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க…

Mar 21, 2023

சர்வதேச நாணயநிதியத்தின் அறிவிப்பு- சம்பிக்க எச்சரிக்கை!

Mar 20, 2023

மனித வெடிகுண்டுக்கான மூளைச்சலவை, மறுவாழ்வு மையங்களை…

Mar 20, 2023

லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசியக்கொடியை…

Mar 20, 2023

தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி மதபோதகர் பெனடிக் ஆன்டோ கைது.

Mar 20, 2023

12வது நாளாக தொடரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்…

Mar 20, 2023

சிவனொளிபாதமலை-தொதல் பொதியில் இறந்த எலி.

Mar 20, 2023

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்-தேசிய…

Mar 20, 2023

தேர்தல் நடைபெறாது – மஹிந்த தேசப்பிரிய.

Mar 20, 2023

டொலர் நெருக்கடி முடிவுக்கு வரும் – ஆளுநர் நந்தலால்…

Mar 20, 2023
Prev Next 1 of 146
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.