• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

சட்டப்பேரவையில் இருந்து ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளியேற சபாநாயகர் உத்தரவு!

By Editor On Oct 18, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் தொடர்பாக அறிவிப்பேன் என தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டதால், இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக கேள்வி நேரத்திற்கு பின் விளக்கம் அளிப்பேன் என்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை புறக்கணிப்பதற்காக திட்டமிட்டே அமளியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்த நிலையில், பேரவை மாண்பை குறைக்கும் வகையில் நடந்துகொண்டதால், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

Catchup shows

ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு ஆணையிட்டார். அதன்படி, அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து பேரவையில் இருந்து ஈபிஎஸ் உள்ளிட்ட அவரது தரப்பு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, எதிர்க்கட்சி துணைத் தலைவர் சர்ச்சை நீட்டிக்கும் நிலையில், சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் அருகருகே அமர்ந்திருந்தனர்.

Prev Post

ஜனாதிபதி ரணில் எந்த நேரத்திலும் பின்வாங்கலாம்: குமார வெல்கம தெரிவிப்பு.

Next Post

சட்டப்பேரவை விதியின் கீழ் துணைத் தலைவர் பதவி இல்லை! தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் – சபாநாயகர்.

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.