• Tuesday, March 21, 2023

Meiveli Meiveli - News

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

சட்டப்பேரவையில் இருந்து ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளியேற சபாநாயகர் உத்தரவு!

By Editor On Oct 18, 2022
90
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் தொடர்பாக அறிவிப்பேன் என தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டதால், இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக கேள்வி நேரத்திற்கு பின் விளக்கம் அளிப்பேன் என்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை புறக்கணிப்பதற்காக திட்டமிட்டே அமளியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்த நிலையில், பேரவை மாண்பை குறைக்கும் வகையில் நடந்துகொண்டதால், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு ஆணையிட்டார். அதன்படி, அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து பேரவையில் இருந்து ஈபிஎஸ் உள்ளிட்ட அவரது தரப்பு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, எதிர்க்கட்சி துணைத் தலைவர் சர்ச்சை நீட்டிக்கும் நிலையில், சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் அருகருகே அமர்ந்திருந்தனர்.

Prev Post

ஜனாதிபதி ரணில் எந்த நேரத்திலும் பின்வாங்கலாம்: குமார வெல்கம தெரிவிப்பு.

Next Post

சட்டப்பேரவை விதியின் கீழ் துணைத் தலைவர் பதவி இல்லை! தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் – சபாநாயகர்.

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க…

Mar 21, 2023

சர்வதேச நாணயநிதியத்தின் அறிவிப்பு- சம்பிக்க எச்சரிக்கை!

Mar 20, 2023

மனித வெடிகுண்டுக்கான மூளைச்சலவை, மறுவாழ்வு மையங்களை…

Mar 20, 2023

லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசியக்கொடியை…

Mar 20, 2023

தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி மதபோதகர் பெனடிக் ஆன்டோ கைது.

Mar 20, 2023

12வது நாளாக தொடரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்…

Mar 20, 2023

சிவனொளிபாதமலை-தொதல் பொதியில் இறந்த எலி.

Mar 20, 2023

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்-தேசிய…

Mar 20, 2023

தேர்தல் நடைபெறாது – மஹிந்த தேசப்பிரிய.

Mar 20, 2023

டொலர் நெருக்கடி முடிவுக்கு வரும் – ஆளுநர் நந்தலால்…

Mar 20, 2023
Prev Next 1 of 146
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.