• Monday, September 25, 2023

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

அரிசிக் கையிருப்பு வரும் மாதங்களில் தீர்ந்துபோகலாம்!

Kumarathasan Karthigesu

By Editor On Oct 18, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
LESS
SUPPORT TO MEIVELI

பிரான்ஸின் அரிசி ஆலைகளின் ஒன்றியம் (Syndicat de la Rizerie Française) அரிசித் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக் குறித்த எதிர்வு கூறலை வெளியிட்டிருக்கிறது. பெரும் அரிசி உற்பத்தி நாடுகளில் சமீபகால ங்களில் ஏற்பட்ட பருவநிலை மாறுதல்களின் விளைவாக நெல் விளைச்சல் பெருமளவில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்துவருகின்ற மாதங்களில் உலகின் அரிசிக் கையிருப்புத் தீர்ந்து போகலாம் என்று ஒன்றியம் எச்சரித்துள்ளது.

நாட்டில் அரசி நெருக்கடி அறுவடைக் காலமாகிய வரும் பெப்ரவரி – மார்ச் மாத காலப்பகுதியில் தொடங்கலாம். அப்போது கடைகளில் முற்று முழுதாக அரிசி தீர்ந்துபோகாது விட்டாலும் எதிர்காலத்தில் விநியோகங்களுக்கு விலை அதிகரிப்பைச் செய்ய நேரிடும் என்று அரிசி ஆலைகளின் ஒன்றியத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸ் வருடாந்தம் 50 ஆயிரம் தொன் அரிசியை உற்பத்தி செய்கிறது. ஆனால் நாட்டின் பெரும் சந்தைகளில் 2ஆயிரத்து 40 ஆயிரம் தொன் அரிசி ஆண்டுதோறும் விற்பனையாகிறது. பல காரணங்களால் வருடாந்த அரிசி உற்பத்தி இம்முறை பெரு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக அரிசி இறக்குமதி தடைப்படுமாக இருந்தால் உள்நாட்டில் அதற்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உற்பத்தியாகின்ற பாசுமதி அரிசியே (basmati rice) பிரான்ஸில் 45 சதவீதம் நுகரப்படுகிறது. இவ்விரு நாடுகளிலும் சமீப நாட்களில் ஏற்பட்ட கடும் வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்குப் போன்றன நெற்தானிய விளைச்சலைப் பலமாகத் தாக்கியிருக்கின்றன. சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் தொன் (250,000 tonnes) நெல் வகைகள் அழிந்துள்ளன. இந்த நிலைவரம் காரணமாக இவ்விரு நாடுகளும் தத்தமது சொந்த மக்களது நலனைக் கருத்தில் கொண்டு அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளன.

பாசுமதி மட்டுமன்றி ஐரோப்பாவில் நுகரப்படுகின்ற ஏனைய பல அரிசி வகைகளும் ஆசிய நாடுகளிலேயே உற்பத்தியாகின்றன. அந்த நாடுகள் பலவும் எரிசக்தி நெருக்கடி, காலநிலைப் பாதிப்பு என்று பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. அதனால் உலகளாவிய அரிசி உற்பத்தியும் ஏற்றுமதியும் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளன.

உக்ரைன் போர் உலகின் தானியத் தன்னிறைவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கோதுமை, சோளம் போன்றவற்றுக்கு உலக அளவில் தட்டுப்படு ஏற்பட்டுள்ளது. அது மனித உணவுத் தேவைகளை மட்டுமன்றி கால்நடைகளுக்கான தீவனங்களினது உற்பத்தியையும் பாதித்துள்ளது.

சீனா போன்ற நாடுகள் கால்நடைத் தீவனத் தேவைகளுக்கான அரிசியை ஆசிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய முயன்று வருகின்றன. இதுவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமாகியு ள்ளது.

Prev Post

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு Booker பரிசு!

Next Post

உக்ரயினில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

இந்தியா-கனடா பிரச்சினை.! பஞ்சாப் பாஜக தலைவர் வெளியுறவுத்துறை…

Sep 25, 2023

நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி…

Sep 25, 2023

பல்பொருள் அங்காடி யுவதி விவகாரம்-ஏழுபேர் கைது.

Sep 25, 2023

கண்டி-பணத்திற்காக பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்யும்…

Sep 25, 2023

ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது-…

Sep 25, 2023

மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை…

Sep 25, 2023

மனித உரிமை ஆணையாளருக்கு விபரங்களை அனுப்பிவைத்த ஆசாத் மௌலானா.

Sep 25, 2023

இலங்கையில் எரிபொருள் நிலையத்தை ஆரம்பிக்கவுள்ள அமெரிக்க.

Sep 25, 2023

தகராறு செய்த கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி…

Sep 24, 2023

கோவையில் நான் போட்டியிட தயாராக உள்ளேன்: கமல்ஹாசன் அறிவிப்பு

Sep 22, 2023
Prev Next 1 of 220
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.