• Tuesday, May 30, 2023

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளவே சர்வதேச தரப்பு முயற்சி: வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு.

By Editor On Oct 6, 2022
111
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின்  கூட்டத்தொடரில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு  மிக்க குறைவான ஆதரவே கிடைக்கும், அதற்கான இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையுடன் இணங்கப்போவதில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், இன்று காலையில் ஜெனிவாவில் இருந்து அமைச்சர் சூம் தொழிநுட்பம் மூலமாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைகளை கண்டறியும் பொறிமுறை அவசியம் எனவும், அது உள்ளக பொறிமுறையாக அமைய வேண்டும் எனவும்  தெரிவித்துள்ள அவர்,  உண்மைகளை கண்டறியும் விதமாக உள்ளக பொறிமுறையை உருவாக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இது குறித்த பொறிமுறை ஒன்றினை உருவாக்க அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்தார் பயங்கரவாதத்தடைச்  சட்டத்தில்  தேவையான மாற்றங்களை செய்துள்ளதாகவும், இச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 200க்கும் அதிகமானவர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இம்முறை பிரேரணையில் பொருளாதார குற்றங்கள் குறித்து தெரிவித்துள்ள போதிலும், பொருளாதார விடயங்களை சுட்டிக்காட்டும்  உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை என தெரிவித்த அமைச்சர், இலங்கைக்கு எதிராக மேலும் மேலும் குற்றங்களை சுமத்தி இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளவே சர்வதேச தரப்பு முயற்சிப்பதாகவும், பிரிவினையினை வலுப்படுத்தும் பிரதான இரண்டு நாடுகளே இந்த முயற்சிகளின் பின்னணியில் இருந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தைத் தவிர்க்கும் புலம்பெயர் தமிழ் குழுக்களுடன் இலங்கை உரையாடலில் ஈடுபடும் என்றார்.

Prev Post

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்-பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

Next Post

முதல் டி20 கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வரலாற்றுச் சாதனையை தன்வசமாக்கியது திருக்கோணமலை ஸ்ரீ சண்முகா…

May 30, 2023

“ஆசிய கண்டத்தில் தூய்மையான கடற்கரைகளாக கிழக்கு…

May 29, 2023

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்வழி பாடப்பிரிவு நீக்கம் என்ற…

May 26, 2023

நேருவிடம் அளிக்கப்பட்ட  செங்கோல் பிரதமர் மோடியினால்   புதிய…

May 26, 2023

ஜூலை 15 ஆம் திகதி முதல் வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்.

May 26, 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பில்  வெளிநாட்டு…

May 26, 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் அருங்காட்சியகம்…

May 26, 2023

வடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்க ஜீவன்…

May 26, 2023

வெளிநாட்டுக் கட்சிகளின் ஆலோசனைகளை வைத்து கட்சியைப்…

May 25, 2023

எதிர்ப்புக்களை மீறி தையிட்டி விகாரை இரகசியமாக திறந்து…

May 25, 2023
Prev Next 1 of 185
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.