• Tuesday, February 17, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

பணத்திற்கு விலைபோகும் சிறைச்சாலை அதிகாரிகள், தாக்குதல் நடத்த அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு

By Admin Last updated Sep 20, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

Catchup shows
பணத்திற்காக சிறைக் கைதிகள் மீது தாக்குதல் நடத்தும் மற்றும் தாக்குதல் நடத்த அனுமதி அளிக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து  கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தென்னிலங்கை அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி கொழும்பு தடுப்புக் காவல் சிறையில், பிரதான சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் முன்னிலையில், கைதி ஒருவர், சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட  சுதேஷ் நந்திமால் சில்வா, கடந்த காலத்தில் பணத்திற்காக ஒருசில சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமைக்கான பல உதாரணங்களை சுட்டிக்காட்டியதோடு, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவமும் அவ்வாறான ஒரு சம்பவமா என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்குள் இடம்பெறும் சித்திரவதைகள் குறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் பேசியுள்ளோம். எனினும் கடந்த 9ஆம் திகதி  கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் மஹிந்த குமார திலகரத்ன என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த கைதி விசேட பாதுகாப்புடன் தடத்து வைக்கப்பட்டுள்ளர். மஹிந்த குமார வேறுவொரு கைதியினால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். விசேட பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதிக்கு இவ்வாறு எப்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என நாம் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கேட்க விரும்புகின்றோம். பிரதான சிறைச்சாலை அதிகாரியும், வேறு இரு அதிகாரிகளும் சிறையில் இருந்து குறித்த கைதியை வெளியில் எடுத்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் தாக்குதலை மேற்கொண்ட கைதியும் அருகில் இருந்துள்ளார். குறித்த பிரதான சிறைச்சாலை அதிகாரியும், வேறு இரு அதிகாரிகளும் அருகில் இருந்த சமயத்தில்தான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல், பராமரிப்பு, புனர்வாழ்வு என்பதே சிறைச்சாலைகளின் அடிப்படை கொள்கைகளாக காணப்படுகின்றன. எனினும் இவை எதுவும் சிறைச்சாலைகளில் இடம்பெறுவதில்லை. அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்குமானால்  மஹிந்த குமார திலகரத்ன தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கமாட்டார். கடந்த காலங்களில் ஒப்பந்தங்களுக்கு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையை நாம் அறிவோம். ஆகவே குறித்த பிரதான சிறைச்சாலை அதிகாரியும் இந்த தாக்குதலுடன் தொடர்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தகவர்களின் பெயரை குறிப்பிட்டு பணத்தை வழங்கியதும் வலைந்து கொடுக்கும் சில அதிகாரிகள் சிறைச்சாலையில் இருப்பதை நாம் அறிவோம். இந்த குறித்த சிறைச்சாலை அதிகாரியும் அவ்வாறான ஒருவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அவர் இருக்கும்போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.என்றார்.

ஆகவே கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அதிகாரிகளே இன்று அவர்ளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும்,  ஆகவே குறித்த அந்த ஒருசில அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Prev Post

பிரித்தானிய மாகாரணி மீதான அக்கறை நாட்டு மக்கள் மீது ஏன் இல்லை

Next Post

பண்டோரா ஆவணங்கள் வெளியானமை, இலங்கையில் என்ன நடந்தது?

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

தமிழக அரசு  லெட்டர் எழுதினா மட்டும் போதுமா: மீனவர்கள்…

Feb 16, 2026

இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் இலங்கைத்…

Feb 16, 2026

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பலியான மன்னார் இளைஞன்:…

Feb 16, 2026

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா தூண்டுதல்

Feb 16, 2026

தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால்…

Feb 16, 2026

ஐஎம்எப் இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா…

Feb 16, 2026

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பதவி நீக்கம்…

Feb 16, 2026

க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை – 2025 (2026)

Feb 16, 2026

தேசிய பெண்கள் ஆணைக்குழு செயலிழப்பு மற்றும் பாதுகாப்பு…

Feb 16, 2026

நாட்டில் பாதாள உலக ஆட்சியை உருவாக்க முற்படும் அரசாங்கம்:…

Feb 16, 2026
Prev Next 1 of 64
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.