• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ரணில் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு விரிவுரையாளர்கள் கடும் எதிர்ப்பு

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 7, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

 

பயங்கரவத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகளுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி என்ற வகையில் நியாயமாக செயற்படுமாறு கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதியை தெரிவித்துள்ள திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் ஜனநாயகப் போராட்டங்களை அடக்குவதையும், போராட்டக்காரர்களை கைது செய்வதையும் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் சரியாக செயற்படவில்லை எனின், இந்த நாட்டிற்கு தெரிவிக்கப்படும் முன்னுதாரணம் என்ன? கடந்த சில தசாப்தங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் கடந்த தேர்தலில் மாத்திரமே தோல்விடையந்தீர்கள். அவ்வாறான நீங்கள் முதிர்ச்சியுடனும், முன்னுதாரணமாகவும் செயற்பட வேண்டும் என்பதை நாம் தெரிவிக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் உங்களை பிரதமராக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில், தெரிவிக்கின்றோம் நீங்கள் இவ்வாறு செயற்படுவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜீவந்தர, வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் உள்ளிட்டவர்கள் வளர்ச்சியடைந்த இளைஞர் சமுதாயத்தின பிரதிநிதிகளே. அவர்கள் ஜனநாயகத்தை செயற்பாடுகள் மற்றும் அனுகுமுறைகளை மதிக்கும், நிராயுதபானிகளான மக்களையே அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். அவர்கள் எமது பல்கலைக்கழ மாணவர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தவறான மனிதராக நீங்கள் வரலாற்றில் இடம்பிடிக்கவேண்டிய அவசியமில்லை. இந்த அடக்குமுறையை நிறுத்துமாறு நாங்கள் மக்கள் சார்பில் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். என்றார்.

இலங்கையில் இடம்பெறும் மக்கள் சார்பு ஜனநாயகப் போராட்டங்களில் முன்னிற்கும் இளைஞர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்த முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

ரணில் ஆட்சியின் அடக்குமுறை குறித்து ஜேடிஎஸ் ஐ.நாவிற்கு அறிக்கை

Next Post

தமிழ் ஆர்வலர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது – வீடியோ இணைப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.