• Thursday, July 3, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

வழமைக்கு மாறாக ஜனாதிபதி சிங்களத்தில் கையெழுத்திடுவது பற்றி சுமந்திரன் விசனம்

By Editor Last updated Sep 2, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

 

இதுவரை காலமும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் நீரிறைக்கும் இயந்திரத்துக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தங்களது படகு இயந்திரங்களுக்கும் மண்ணெண்ணெய் இல்லாது அவஸ்தைப்படுகின்றனர்.

Catchup shows

இந்த விடயத்தை எவ்வளவு தடவை எடுத்துக்கூறியும் அதற்கு எந்த விதமான பதிலும் கிடைக்க வில்லை. கிடைத்த ஒரேயொரு பதில் 87 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் 340 ரூபாவாக 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு மட்டுமே வந்ததே தவிர மண்ணெண்ணெய் வரவில்லை.கஷ்டப்படுகின்ற விவசாயிக்கும் கடற்தொழிலாளிக்கும் இதுவரைக்கும் எந்த நிவாரணமும் கொடுக்கப்படவில்லை.

இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் கூட மண்ணெண்ணெய் பாவிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென்ற முன்மொழிவு இருக்கின்றது. ஆனால் ஒதுக்கீட்டில் இந்த நிவாரணத்துக்காக ஒரு சதம் கூட ஒதுக்கப்படவில்லை.அண்மைய நாட்களாக துப்பாக்கி சூட்டு மரணங்கள் அதிகரித்துள்ளன. அந்த மரணங்களை தடுக்கவோ சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ பொலிஸ் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால் மக்களின், மாணவர்களின் போராட்டங்களி அடக்கவே பொலிஸ் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு இடத்தில் 500 பேர் ஆர்ப்பாட்டம் செய்தால் அங்கு 1000 பொலிஸார் நிற்கின்றனர்.ரணில் விக்கிரமசிங்க வழக்கமாக ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுவார் ஆனால் அவர் ஜனாதிபதியானதன் பின்னர் 3 தடுப்புக் காவல் சட்ட ஆவணங்களிலும் சிங்களத்தில்தான் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அவரின் மன நிலை மாறி வருவதனைக் காண முடிகின்றது’ என்றார்.

Prev Post

ஊடகப்பிரிவில் 40 நியமனங்கள் எதற்கு? :ஜனாதிபதி ரணிலிடம் அநுர குமார கேள்வி

Next Post

மே 9 தாக்குதல், பாதுகாப்பு செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கேள்விகள்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின்…

May 20, 2025

தமிழ் டயஸ்போராவுக்கு அரச தரப்பில் ஆதரவு? – சரத்…

May 20, 2025

இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும்…

May 20, 2025

ஊடகத் துறையுடன் தொடர்புடைய 21 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்…

May 16, 2025

காணி சுவீகரிப்பைத் தடுக்க சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது…

May 15, 2025

கனடாவில் வாழும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கு…

May 15, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச…

May 15, 2025

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு…

May 12, 2025

அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு…

May 12, 2025

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட…

May 12, 2025
Prev Next 1 of 419
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.