• Thursday, November 13, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : ஓ.பன்னீர்செல்வம்

By Editor Last updated Sep 2, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஜுலை 11ம் தேதி  நடைபெற்று அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு  பிறகு, பொதுச் செயலாளர் பொறுப்பை ரத்து செய்து கட்சியை வழிநடத்திட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. நடந்து முடிந்த 2021  சட்டமன்றத் தோல்விக்கு வலிமையான தலைமை இல்லாதாதால்  தோல்வியை சந்தித்ததாகவும், மீண்டும் ஒற்றைத் தலைமை பொறுப்பு கொண்டுவரப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், 2022 ஜுன் மாதம் 14 தேதியன்று அதிமுக தலைமைக்  கழகத்தில் நடைபெற்ற கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்னையை முன்வைத்தனர்.

மேலும், கடந்த ஜூன் 23 அன்று நடந்த பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இரட்டைத் தலைமையை ரத்து மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவது தொடர்பான விவரங்கள் இதில் இடம்பெற வில்லை.

Catchup shows

இதனையடுத்து, கடந்த ஜுலை 11 அன்று நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்த பொதுக்குழு செல்லாது என்று  ஓ.பன்னீர்செல்வம் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.  இந்த, உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வீசாரணை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடைபெற்றது.
இன்று வெளியான தீர்ப்பில்,  தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாகவும், பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போது, இந்த தீர்ப்புக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Prev Post

அதிமுக பொதுக்குழு செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

Next Post

மின் வெட்டைத் தவிர்க்க அணு உலைகள் அனைத்தையும் இயக்க முடிவு!

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025

கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள்…

Nov 2, 2025

ஆழ்கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர்…

Nov 2, 2025

ஊடகத்தினருக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்…

Nov 1, 2025

மலேசிய கடலோர காவல்படை கப்பல் ‘KM BENDAHARA’ தீவை விட்டு…

Oct 31, 2025

நாட்டில் சட்டம் ஒழுங்கு எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில்…

Oct 31, 2025

இலங்கை மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) PhD…

Oct 31, 2025

தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு…

Oct 31, 2025
Prev Next 1 of 420
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.